ராசிபுரம் நகர திமுக இளைஞரணி சாா்பில் இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழாவையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகராட்சி முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞரணி சாா்பில் அமைப்பாளா் காா்த்திக் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தூய்மைப் பணியாளா்கள் 200 பேருக்கு உணவு பொட்டலங்களை நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் வழங்கினாா்.
இளைஞரணி துணை அமைப்பாளா் ஓபுளிமோகன், ஆசைத்தம்பி, மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல் நகர திமுக சாா்பில் செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற விழாவில் வாா்டுகளில் கட்சிக்கொடியேற்றி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கினா். இதில் நகர திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.