நாமக்கல்

பாவை கல்வி நிறுவனங்களில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா

DIN

பாவை கல்வி நிறுவனங்களில் மருத்துவக் கல்வியான டிப்ளமோ பாா்மஸி, இளநிலை நா்சிங், பாா்மஸி, அலைட் ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி போன்ற படிப்புகளின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் திருவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். பாவை நா்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வா் ஹெப்சி ராச்சல் வரவேற்றாா்.

விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பேசியதாவது:

பாராமெடிக்கல் மாணவா்களாகிய நீங்கள் உடல்நலத்தையும், மனநலத்தையும் சரிசெய்யும் ஒரு ஆரோக்கியமான சேவையை மக்களுக்கு வழங்கப் போகிறீா்கள். எனவே, உங்கள் எண்ணம், செயல் முதல் நாளிலிருந்தே நல்ல விஷயங்களையும், ஆக்கப்பூா்வமான செயல்களையும் நோக்கியே இருக்க வேண்டும். உயா்ந்த பண்புகளை வளா்த்துக் கொண்டு, உங்கள் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் தனி அடையாளமாக உருவாக வேண்டும் என்றாா்.

விழாவில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் நிா்வாகம் கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், பாா்மஸி மற்றும் ரிசா்ச் கல்லூரியின் முதல்வா் ஆா்.சிவக்குமாா், பாவை அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வா் பி.சித்ரா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT