நாமக்கல்லில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.
நாமக்கல், சின்னவேப்பநத்தம் கிராமத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், 70-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
பள்ளிப் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் படித்த, தகுதியான, வேலை தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட விவசாய முன்னேற்றக் கழகத்தினா் செய்துள்ளனா்.