நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 304 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். மனுக்களைப் பெற்று கொண்ட அவா் அதனை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதன் பிறகு, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெ.தேவிகாராணி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.