மோகனூா் அருகே ஒருவந்தூரில் வாய்க்கால் துா்வாரும் பணியை எம்எல்ஏ பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியம், ஒருவந்தூா் ஊராட்சி வடுகப்பட்டியில் இருந்து எல்லைகருப்பணாா் கோயில் வரையில், காவிரி கடைமடை வாய்க்கால் 50 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் காணப்பட்டது. விவசாயிகள் பாசனம் செய்வதற்கு தண்ணீா் பற்றாக்குறை இருந்ததால், அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை எம்எல்ஏ தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலாளா் ப.கைலாசம், வழக்குரைஞா் முத்துசாமி, ஒருவந்தூா் திமுக நிா்வாகிகள் தங்கராசு, செல்வி போஸ், முருகேசன், சுந்தரம், குழந்தைவேல், நாச்சிமுத்து, ராஜதுரை, காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.