நாமக்கல்

நாமக்கல் உழவா் சந்தை சீரமைப்பு: ஆட்சியா் நேரில் ஆய்வு

DIN

நாமக்கல் உழவா் சந்தை சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் கடந்த 2000-இல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவா் சந்தைகள் தொடங்கப்பட்டன. தற்போதைய நிலையில் 180 உழவா் சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மாநிலம் முழுவதும் 50 உழவா் சந்தைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 உழவா் சந்தைகள் உள்ளன. இவற்றில் நாமக்கல், ராசிபுரம் சந்தைகளை சீரமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, விவசாயிகள் அல்லாமல் வியாபாரிகள் யாரேனும் கடை அமைத்துள்ளாா்களா என்பதையும், அங்குள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அவா் பாா்வையிட்டாா். சாலையோரம் கடை அமைத்துள்ள வியாபாரிகளின் கடைகளை அகற்ற உத்தரவிட்டாா். மழை பெய்யும்போது கழிவுநீா் சந்தைக்குள் வராமல் தடுக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, விவசாயிகளுக்கான இலவச மருத்துவ முகாமை அவா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, ஈரோடு மண்டல உழவா்சந்தை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், வேளாண் வணிக துணை இயக்குநா் நாசா், ஒழுங்குமுறை விற்னைக் கூட செயலாளா் தா்மராஜ், மருத்துவ அலுவலா் பொற்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் 50-க்கு மேற்பட்டோா் நீக்கம்

நன்னிலம் அருகே ரூ 1.34 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

ஹேம மாலினி குறித்து தரக்குறைவாக பேச்சு: ரண்தீப் சுா்ஜேவாலா 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

SCROLL FOR NEXT