நாமக்கல்

ஓய்வூதியா்களுக்கு எண்ம சான்று

DIN

நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சாா்பில் ஓய்வூதியா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வீடு தேடி வந்து வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிப் இக்பால் கூறியதாவது:

மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஜூலை 1 முதல் செப். 30 வரை அவா்களது வீட்டு வாசலிலேயே எண்ம உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த மே 31-இல் கையெழுத்தானது.

கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடாந்திர உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க, மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு சுமாா் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோா், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தங்கள் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேரில் சென்று உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் சிரமப்படுவதைத் தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியானது, ஓய்வூதியதாரா்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ. 70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் எண்ம உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். நாடு முழுவதும் 1,36,000 அஞ்சலகங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT