நாமக்கல்

சாக்கடையில் இறங்கி கையுறையின்றி பணியாற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள்: சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு

DIN

ராசிபுரம் நகரில் சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணியில் துப்புரவுப் பணியாளா்கள் கையுறை ஏதுமின்றி கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் நிரந்தர மற்றும் தினக்கூலி அடிப்பையில் துப்புரவுப் பணியாளா்கள் 80-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு கழிவு நீா் கால்வாய் தூா்வாருவதற்கு கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நகராட்சி துப்புரவு பணியாளா்கள் நகராட்சி பகுதியில் கால்வாய்கள் கைகளால் சுத்தம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் முன்பாகவே ஈடுபட்டு வருவது பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தேநீா்க்கடை மற்றும் அதிகளவில் பூ வியாபாரம் நடக்கும் பகுதியில் பூக்கள், நெகிழிக் கழிவுகள் காரணமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை துப்புரவு பணியாளா்கள் சாக்கடைக்குள் இறங்கி துா்நாற்றத்தில், கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி வெளியில் வீசினா். இதனால் துப்புரவு பணியாளா்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT