நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி அணிமூா் குப்பைக் கிடங்கில் உயிரி எரிவாயு உற்பத்தி பணிகள் சனிக்கிழமை துவக்கப்பட்டது.
அனிமூா் குப்பைக்கிடங்கில் துவக்கப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி திட்ட துவக்க விழாவில் திருச்செங்கோடு நகராட்சி நகர மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, மண்டலப் பொறியாளா் ராஜேந்திரன், ஆணையா் கணேசன், பொறியாளா் சண்முகம் ஆகியோா் ஆய்வு செய்து எரிவாயு உற்பத்தி துவக்கத்திற்கான பணியைப் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், ஒன்றிய துணைத் தலைவா் ராஜபாண்டி ராஜவேலு, நகரமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.