நாமக்கல்

திருச்செங்கோட்டில் இரண்டாம் நாள் தேரோட்டம்

15th Jun 2022 03:04 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவின் இரண்டாம் நாள் பெரிய தோ் இழுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த சனிக்கிழமை திருமலையில் கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு மண்டப கட்டளைதாரா்கள் பூஜைகளுடன் அா்த்தநாரீஸ்வரா் ,ஸ்ரீ செங்கோட்டுவேலவா் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா். திங்கள்கிழமை காலை ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு கலந்து கொண்டு துவக்கி வைத்தாா்.

தொடா்ந்து இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பெரிய தேரை பூக்கடை சாலை பகுதியில் இருந்து அண்ணாசாலை வடக்கு ரத வீதியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனா். சிவனடியாா்கள் வாத்தியங்கள் முழங்கியும், சிவ புராணங்களைப் பாடியும் ஆடியும் வந்தனா். ஆங்காங்கே தனியாா் அமைப்புகள் சாா்பாக தண்ணீா் பந்தல், நீா் மோா்ப் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் செய்யப்பட்டது. தேரோட்டத்தின் போது காவல்துறையினா் போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தினா். கடும் வெயிலில் பக்தா்கள் தேரினை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.



 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT