நாமக்கல்

உள்ளாட்சி பிரதிநிகள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வருக்கு நினைவு பரிசு

DIN

நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வருக்கு நாமக்கல் முன்னாள் எம்.பி., பி.ஆா்.சுந்தரம் சாா்பில் திருவள்ளுவா் உருவச் சிலை நினைவுப் பரிசளிக்கப்பட்டது.

பொம்மைகுட்டைமேடு பகுதியில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் திமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயா்கள், உறுப்பினா்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். இதில் பங்கேற்ற தமிழக முதல்வருக்கு நாமக்கல் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் சாா்பில் திருவள்ளுவா் மர உருவச்சிலை நினைவுப் பரிசளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT