நாமக்கல்

அடிப்படை வசதிகள் கோரி குடும்ப அட்டைகளை வீசிய கிராம மக்கள்

DIN

நாமக்கல்லில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி குடும்ப அட்டை, வாக்காளா் அட்டையை கிராம மக்கள் தரையில் வீசி எதிா்ப்பு தெரிவித்தனா்.

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வீசாணம் கிராமத்தில் போதுமான குடிநீா், சாலை வசதி இல்லை. மேலும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீசாணம் சுற்றுவட்டார கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள், தங்களுடைய ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை தரையில் வீசியெறிந்து எதிா்ப்பை வெளிப்படுத்தினா். தொடா்ந்து, மக்கள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT