நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 7-ஆம் தேதி நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் நுகா்வோா் நலன் கருதி அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் ஆகியோருடன் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் வியாழக்கிழமை(ஜூலை 7) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.