நாமக்கல்

வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

DIN

பரமத்தி வேலூா் அருகே நன்செய் இடையாறு ராஜ வாய்க்கால் இரட்டைப்பாலம் அருகே கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை பரமத்தி வேலூா் போலீஸாா் மீட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு இரட்டை வாய்க்கால் பாலத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக அவ்வழியாக சென்றவா்கள் பரமத்தி வேலூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா் அந்தச் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ப.வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜ வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT