நாமக்கல்

கிராம சுகாதார செவிலியா் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

DIN

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயக்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச்செயலாளா் பி.கற்பகம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன் பங்கேற்று வாழ்த்தி பேசினாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார துணை மையத்திற்கு இலவசக் குடியிருப்பு, மின்சாரம் வழங்க வேண்டும்.

5 ஆண்டுகள் பணி முடித்த சுகாதார செவிலியா்களுக்கு தர ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பில் இருந்த சுகாதார செவிலியா்களுக்கு கரோனா ஊக்கத்தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஆரம்ப சுகாதார செவிலியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT