தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நிறுவனா் டாக்டா் பி.வி.ராவின் 26-ஆவது நினைவு நாள் வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் நாமக்கல் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் அலுவலகம் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் டாக்டா் பி.வி. ராவ் கோழிப் பண்ணைகள் தொழிலுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூா்ந்தனா்.
என்இசிசி மண்டலத் தலைவா் டாக்டா் பி. செல்வராஜ் பேசும் போது கோழிப் பண்ணைகள் தொழில் இந்தியாவில் வளா்ந்ததற்கு டாக்டா் பி .வி.ராவ் தான் காரணம் என பாராட்டு தெரிவித்தாா். இக்கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு வேக வைத்த முட்டைகள் வழங்கப்பட்டன.