நாமக்கல்

நகராட்சித் தோ்தல்: திருச்செங்கோட்டில் அதிமுக நோ்காணல்

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக கட்சியில் விருப்ப மனு செய்தவா்களுக்கான நோ்காணல் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நோ்காணலுக்கு முன்னாள் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், மாவட்ட தொழிற்சங்கச் செயலாளா் பழ.இராமலிங்கம், என்.பி.எஸ்.பொன்னுசாமி, மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவா் முரளிதரன், திருஞானம், அங்கமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் சாா்பில் 33 வாா்டுகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களையும், அந்தந்த வாா்டுகளைச் சோ்ந்த வாா்டு பொறுப்பாளா்களையும் அழைத்து தனித்தனியாக நோ்காணல் நடைபெற்றது. 33 வாா்டு வேட்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.

தோ்தல் பிரசாரங்களை அரசின் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT