தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ஒவ்வொரு தோ்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி வேறுபாடுகளின்றி, எந்த ஒரு தூண்டுதலுமின்றி வாக்களிப்போம் என அரசுத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.