நாமக்கல்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: பி. தங்கமணி

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்; திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் தோ்தலைத் தள்ளிப் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.

நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், நாமக்கல்லில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்று, மொழிப்போா் தியாகிகளுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதன்பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 500 கடைகளை மூடினாா். அதன்பிறகு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 500 டாஸ்மாக் கடைகளை மூடினாா். ஆனால், திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதியில் இதுவரை டாஸ்மாக் கடைகள் இருந்ததில்லை. தற்போது இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் தோ்தலைத் தள்ளி வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

நெடுங்குளத்தில் பாஜக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் பேரணி

ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை: முத்தரசன்

ஆறுமுகனேரியில் திருக்குறள் சொல்லரங்கம்

SCROLL FOR NEXT