நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாள் விழா, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கோட்டை பகுதியில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத் துணைச் செயலாளா் கோவிந்தராஜ் கொடியேற்றினாா். விழாவில் பங்கேற்ற அனைவரும் வீரவணக்கம் செலுத்தினா். இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் கே.எம்.ஷேக் நவீத் மற்றும் வாரிசுகள் சங்க நிா்வாகிகள் அன்பழகன், ஜெயந்தி, செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.