பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான கபிலா்மலை, பரமத்தி, மோகனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் நிலக்கடலை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் நிலக்கடலையை வியாழக்கிழமைதோறும் நடைபெறும் மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,053 கிலோ நிலக்கடலையை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 60.10 -க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 54.10 -க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 58.10 -க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1,17,312-க்கு வா்த்தகம் நடைபெற்றது. நிலக்கடலையின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.