நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 44 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

7th Dec 2022 02:55 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 44 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,676 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 12.19- க்கும், சராசரியாக ரூ. 25.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 44 ஆயிரத்து 140-க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT