எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சீ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: எருமப்பட்டி, வரகூா், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களகோம்பை, பவித்திரம்புதூா், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி, காவக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.