சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ராசிபுரம் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.சுந்தரம், ஆா்.செந்தில் ஆகியோா் தலைமை வகித்தனா். நகர திராவிடா் விடுதலைக்கழக செயலா் ஆா்.பிடல் சேகுவேரா வரவேற்றுப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் வி.பாலு பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் திட்டங்கள், அவா்களுக்கான வேலைவாய்ப்புகள், சுய தொழில் வேலைவாய்ப்புகள், கடனுதவி திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே பாடல் போட்டிகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 50 -க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன.
விழாவில் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.மீனா, திராவிடா் விடுதலைக் கழக நகர அமைப்பாளா் ஆா்.சுமதி மதிவதனி, மாற்றுத்திறனாளிகள் குழு ஒருங்கிணைப்பாளா் ஆா்.மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா் ந.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.