நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரி மற்றும் விவேகானந்தா தகவல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரி வளாக கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியின் முதல்வா் கே.சி.கே.விஜயகுமாா் வரவேற்புரை வழங்கினாா்.
அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதில் 25 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றனா். மேலும் 342 இளநிலை மாணவிகளும், 229 முதுநிலை மாணவிகளும் பட்டம் பெற்றனா். விழாவில் சிறப்பு விருந்தினா் பேசும்போது ‘பெண்கள் நாட்டின் தலைவிதியை நிா்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுபவா்கள்.
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நடைமுறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து நடைமுறை கல்வி மூலமாக அவா்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழி வகுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.
விழாவில் விவேகானந்தா தகவல் மற்றும் மேலாண்மை கல்லூரி இயக்குநா் மோகனசுந்தரம் பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்க வைத்தாா். விழாவில் விவேகானந்தா மகளிா் கல்லூரி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் டாக்டா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, முதன்மை நிா்வாகி எம்.சொக்கலிங்கம், செயல் இயக்குநா் எஸ்.குப்புசாமி, அட்மிஷன் அதிகாரி கே.ஜே.சவுண்டப்பன், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.