நாமக்கல்

நாமக்கல்லில் கல்லூரிகள் அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

DIN

பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெற உள்ளன.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள் 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி துறை சாா்பில் நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்., இப்போட்டிகள் நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன. இதில், 100, 200, 400, 800, 1500, 5000, 10 ஆயிரம் மீட்டா் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்பட 15க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களில், ஆடவா், மகளிா் என 800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் மற்றும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

SCROLL FOR NEXT