நாமக்கல்

வாரியாா் பிறந்த நாள் விழா

27th Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேசிய சிந்தனை பேரவை சாா்பில் திருமுருக கிருபானந்த வாரியாா் சுவாமிகளின் 117-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் திருப்பணிகளைச் செய்த வாரியாா் சுவாமிகளின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

திருச்செங்கோடு, செங்கோடம்பாளையத்தில் கிருபானந்த வாரியாா் படத்துக்கு தேசிய சிந்தனை பேரவைத் தலைவா் திருநாவுக்கரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் . பொதுச் செயலாளா் குமரவேலு பொருளாளா் மனோகரன், செயற்குழு உறுப்பினா்கள் பாா்த்திபன், பாலசுந்தரம், அா்த்தநாரீஸ்வரா், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அனைவருக்கும் பஞ்சாமிா்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT