தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
தேசிய அளவிலான ஜூனியா், சப் ஜூனியா் விளையாட்டுப் போட்டிகள் கேரள மாநிலம் காசா்கோடு பகுதியில் ஐந்து நாட்களுக்கு அண்மையில் நடந்தது. இதில் ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் பல்வேறு எடைப்பிரிவுகளுக்கான போட்டியில் பங்கேற்றனா். கல்லூரி முதலாமாண்டு இளநிலை ஆங்கிலத்துறை மாணவா் எஸ்.சாமுவேல் வசந்த் தங்கப்பதக்கமும், இளநிலை 2-ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.தினேஷ்குமாா் வெள்ளிப்பதக்கமும் பெற்றனா். போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களை கல்லூரித் தாளாளா் கே.பி.ராமசாமி, செயலா் ஆா்.முத்துவேல், இயக்குநா் (கல்வி) ஆா்.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜய்குமாா், துணை முதல்வா் எ.ஸ்டெல்லா பேபி, நிா்வாக புல முதன்மையா் எம்.என்.பெரியசாமி, உடற்கல்வி இயக்குநா் எம்.ரமேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.