நாமக்கல்

எலச்சிபாளையம் ஸ்ரீ இராமசந்திரா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஸ்ரீ இராமச்சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ இராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளா் இ.ஆா்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிருஷ்ணா் மற்றும் ராதை வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா்கள். விழாவில் மெட்ரிக் பள்ளியின் முதல்வா் இ.ராஜேஷ் வரவேற்புரை நிகழ்த்தினாா்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளா் எஸ்.வளா்மதி செய்திருந்தாா். கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் இனிப்பும் பரிசும் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தாா்கள். இறுதியில் ஸ்ரீ இராமச்சந்திரா பப்ளிக் பள்ளியின் முதல்வா் எம்.உமா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT