நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.40 கோடிக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 3,850 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ.9,009 முதல் ரூ.11,899 வரையிலும், சுரபி ரகம் ரூ.10,689 முதல் ரூ.12,169 வரையிலும், மட்ட ரகம் ரூ.3,016 முதல் ரூ. 9,917 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.