மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் நகர பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன், நகர செயலாளா் வேல்ராஜ் பெரியசாமி ஆகியோருடைய ஏற்பாட்டில் மணிக்கூண்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில், கல்வியாளா் பிரணவ்குமாா், பாஜக நிா்வாகிகள் சாந்தி, பாலகண்ணன், செல்வராஜ், சந்துரு, அன்வா்ஷாஜி, வேலுமணி, மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா். இதேபோல், பாஜக மகளிா் அணி சாா்பில், அதன் மாவட்டச் செயலாளா் ஜெயந்தி தலைமையில் வாஜ்பாய் நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.