ராசிபுரம் அருகே ரயில் முன் பாய்ந்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
தாளம்பள்ளி அருகே ரயில் தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை படுத்த சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி தங்கராஜ் (37) மீது அவ்வழியாக சென்ற ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தாா். சேலம் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். குடும்ப பிரச்னை காரணமாக தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.