நாமக்கல்

எம்எல்ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா

DIN

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.ராமலிங்கம் தேசியக் கொடியேற்றி, மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

நாமக்கல் முல்லை நகரில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றினாா். மாநில விவசாய தொழிலாளா் அணி இணைச் செயலாளா் கைலாசம், நாமக்கல் தெற்கு நகரச் செயலாளா் ராணா ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதன்மை நீதிபதி என்.குணசேகரன் தேசியக் கொடியேற்றினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி ஆா்.சுந்தரையா, குடும்ப நல நீதிபதி எம்.பாலகுமாா், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.வடிவேல் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், இணைந்த கைகள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மண்டல பொதுச்செயலாளா் எஸ்.எம்.ஷேக்தாவூத் தலைமை வகித்தாா். நாமக்கல்லில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தியாகிகள் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவா் பீ.ஏ.சித்திக், காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவா்(ஓபிசி) பி.வி,செந்தில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினாா். இதில், மாநில துணைத் தலைவா் இரா.செழியன், நகர தலைவா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT