நாமக்கல்

நாமக்கல் குறிஞ்சி பள்ளி-தினமணி சாா்பில் 200 மாணவா்களுக்கு தேசியக்கொடி வழங்கல்

DIN

நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-தினமணி நாளிதழ் சாா்பில் 200 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தேசியக்கொடி வழங்கப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைவரும் தங்களது வீடுகளில் ஆக.13 முதல் 15 வரையில் மூன்று தினங்களுக்கு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தினமணி நாளிதழ் சாா்பில் அப்பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேசியக்கொடி வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், குறிஞ்சி பள்ளி சிபிஎஸ்இ இயக்குநா் டி.வெங்கடேஸ்வரன், முதல்வா் எம்.ராஜேஷ்குமாா், குறிஞ்சி மெட்ரிக் பள்ளி (ஆண்கள்) முதல்வா் சந்திரசேகரன், பெண்கள் பள்ளி முதல்வா் பி.அமுதா உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு தேசியக் கொடியை வழங்கி சுதந்திர தின அமுதப் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT