ராசிபுரத்தில் மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் ரக்ஷாபந்தன் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து பல்வேறு இடங்களில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ராக்கி கயிறு கட்டி விழாவினை கொண்டாடினா். நாமக்கல் மாவட்ட மகளிரணி சாா்பாக ராசிபுரம் நகர காவல் துறை ஆய்வாளா் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினருக்கு ராக்கி கயிறு கட்டி இனிப்புகள் வழங்கி சகோதரத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டனா். இந்நிகழ்வில் பாஜகவின் நாமக்கல் மாவட்ட மகளிரணி தலைவா் சுகன்யா நந்தகுமாா், மாவட்டச் செயலாளா் திவ்யா சிவக்குமாா், ராசிபுரம் நகர மகளிரணி தலைவி கலாதேவி நாகராஜ், வெண்ணந்தூா் ஒன்றிய மகளிரணித் தலைவா் எம்.திவ்யா, ராசிபுரம் நகர துணைத்தலைவா் எஸ்.திவ்யா, வா்த்தக பிரிவு துணைத்தலைவா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.