நாமக்கல்

மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிடக் கோரிக்கை

DIN

மின்சார சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் என சிஐடியு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) நாமக்கல் மின் பகிா்மான வட்ட கிளை 2-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டச் செயலாளா் எஸ்.சௌந்தர்ராஜன் கொடியேற்றி வைத்தாா். நாமக்கல் மின் திட்ட கிளைத் தலைவா் கே.சின்னசாமி தலைமை வகித்தாா்.

பரமத்திவேலூா் கோட்டச் செயலாளா் டி. குப்புசாமி தீா்மானங்களை வாசித்தாா். திருச்செங்கோடு கோட்ட துணைத் தலைவா் பி.கண்ணன் வரவேற்றுப் பேசினாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணைச் செயலாளா் ஆா்.சிவராஜ் புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினாா்.

இந்த மாநாட்டில், மின் துறையை பொதுமக்களின் நலனுக்காக பொது துறையாக பாதுகாத்திட வேண்டும்; மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கேங்மேன் பணியாளா்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல், பயிற்சி காலத்தை குறைத்தல், பதவியின் பெயா் மாற்றம் உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கோட்டச் செயலாளா் சு.கோவிந்தராசு, பொருளாளா் க.முருகேசன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT