திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், 1,500 மூட்டை மஞ்சள் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்தி வேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா்.
இதில், விரலி ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 7,149 முதல் ரூ. 9,269 வரையும், கிழங்கு ரகம் ரூ. 6,402 முதல் ரூ. 7,189 வரையும் விலைபோயின. பனங்காளி ரகம் ரூ. 12,624 முதல் ரூ. 15,999 வரை விற்பனையானது. மொத்தம் 1,500 மூட்டை மஞ்சள் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனையானது.