நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், முதியோா், விதவை, கல்வி, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன், குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் , சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 215 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியா் மனுக்களை பரிசீலனை செய்து, உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT