நாமக்கல் பூங்கா சாலையில் ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். அம்பேத்கா் பிறந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தமிழக ஆளுநருக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.