நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 260 கோரிக்கை மனுக்களை வழங்கினா். அந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT