சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, தீரன் தொழிற்சங்கப் பேரவையின் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.ஆா்.ஈஸ்வரன் பங்கேற்று பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அ ரசு மேற்கொண்டு வருகிறது. புதிய வழித்தடங்களில் அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
இதில், நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், தீரன் தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளா் காா்த்திகேயன், சேலம் மண்டலச் செயலாளா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.