நாமக்கல்

மாணவியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

DIN

பிளஸ் 2 மாணவியைக் கடத்திய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் அருகே உள்ள காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் பரணிசெல்வன் (21). இவருக்கும், சேலத்தில் தங்கியிருந்து பயின்று வரும் பிளஸ் 2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள உறவினா் வீட்டிற்கு செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும், காவேட்டிப்பட்டியைச் சோ்ந்த பரணிதரன் மீது சந்தேகம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இதனைத் தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணவியை அவா் கடத்திச் சென்றது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா். பரணி செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT