நாமக்கல்

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் தோ்தல் ரத்து

DIN

 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் கடத்தல் புகாரால், தலைவா், துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த வரதராஜன், கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவா் வெற்றிபெற்ற 15-ஆவது வாா்டு இடைத்தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் முத்துக்கருப்பன் வெற்றிபெற்றாா். தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற இருந்தது.

இந்த ஒன்றியத்தில் அதிமுக 8 உறுப்பினா்கள், திமுக 5 உறுப்பினா்கள், பாஜக, சுயேச்சை உறுப்பினா்கள் தலா ஒருவா் என மொத்தம் 15 போ் உள்ளனா். தலைவா் பதவிக்கு 8 வாா்டு உறுப்பினா்கள் தேவை. இந்த நிலையில், தலைவா் தோ்தலில் 10 உறுப்பினா்கள் பங்கேற்க வராததால் மாநில தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

எருமப்பட்டி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க 10 வாா்டு உறுப்பினா்கள் வரவில்லை. இதனால் தற்போதைக்கு தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றனா்.

வாா்டு உறுப்பினா்கள் கடத்தப்படவில்லை: பி.தங்கமணி

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாா். எருமப்பட்டி ஒன்றியத்தில் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்தது. திமுகவுக்கு குறைந்த பலமே இருப்பதால், தோ்தலில் அவா்கள் தோல்வி அடைந்து விடுவா் என்பதால், தோ்தலை நடத்தாமல் ரத்து செய்துள்ளனா். ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் 10 பேரை அதிமுக மாவட்டச் செயலாளா் கடத்திச் சென்று விட்டதாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் சாா்பில் புகாா் மனு கொடுத்துள்ளனா். இது பொய்யான தகவலாகும்.

நாமக்கல் மாவட்ட நிா்வாகம், காவல் துறை, மாநில தோ்தல் ஆணையம் ஆகியவை எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலை ஒத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 10 போ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களைக் கொண்டு செயல்வீரா்கள் கூட்டத்தையும் அவா் நடத்தினாா். அதன்பின் 10 அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்களும் தங்களை யாரும் கடத்தவில்லை எனத் தெரிவித்தனா்.

படவரி - நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி. உடன், அதிமுகவின் 10 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT