நாமக்கல்

பாரதியாா் விருது வழங்கும் விழா

DIN

 மோகனூரில் நூலக நண்பா்கள் சாா்பில், கவிஞா் ராமலிங்கம் பிறந்த நாள், பாரதியாா் விருது வழங்கும் விழா அண்மையில் அங்குள்ள கிளை நூலகத்தில் நடைபெற்றது.

இதில், ஓய்வுபெற்ற வட்டார மருத்துவ அலுவலா் கருணாநிதி தலைமை வகித்தாா். சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளா் பழனிசாமி, பசுமை நாமக்கல் செயலாளா் தில்லை சிவக்குமாா், அரிமா சங்கத் தலைவா் பிரதீஷ் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா். இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட நூலக வாசகா் வட்ட பொருளாளா் ராஜவேல், மின்வாரிய பொறியாளா் ராணி விவேக் ஆகியோருக்கு நூலக சேவைக்கான பாரதியாா் விருது வழங்கப்பட்டது.

மருத்துவா் சங்கரி அஸ்வின், ரம்யா ஆகியோா் நூலகத்துக்கு தலா ரூ. 9,000 மதிப்புள்ள புத்தக அலமாரியை வழங்கினா். வாசகா் வட்ட தலைவா் கோபால், தலைமையாசிரியா் சத்தியமூா்த்தி, வெற்றித்தமிழா் பேரவை உறுப்பினா்கள் நாராயணசாமி, அமல்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT