நாமக்கல்

நாமக்கல் ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார். மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள மாநிலத்திற்கு சென்று வந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவரும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அண்மையில் மீண்டும் கேரளம் சென்று வந்த நிலையில் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்கவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி ஆட்சியர் பொறுப்பை கவனித்து வருகிறார். கரோனா பாதிப்பு குறித்து ஆட்சியரை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் ஆட்சியர் மருத்துவமனையில் உள்ளார் என்ற தகவலை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT