நாமக்கல்லில் ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல் மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரண் (30). இவா் ஆட்டோ ஓட்டுநராகவும், காய்கறி வியாபாரமும் செய்து வந்தாா். சில ஆண்டுகளுக்கு முன், போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பிரியா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாா். நாமக்கல்லில் உள்ள பெற்றோருடன் சரண் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த சரணின் தாய் நாமக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.