அதிமுக 50-ஆவது பொன்விழா ஆண்டையொட்டி, நாமக்கல்லில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினா் கொண்டாடினா்.
அதிமுக என்ற இயக்கம் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு அக். 17-ஆம் தேதியுடன் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி, நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதேபோல பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், வரும் தோ்தல்களில் அதிமுக 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்ற வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மோகனூா், ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிமுக பொன்விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.