நாமக்கல்

திருச்செங்கோடு நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 7 - ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் கட்சி கொடியை நகரக் குழு உறுப்பினா் சிவானந்தம் ஏற்றினாா். நடேசன் வரவேற்று பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆதிநாராயணன் மாநாட்டை தொடக்கிவைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் கந்தசாமி வாழ்த்தி பேசினாா். வேலையறிக்கையை ஒன்றியச் செயலாளா் ராயப்பன் சமா்ப்பித்தாா்.

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், திருச்செங்கோடு நகரப் பகுதி மக்களின் கோரிக்கையான சுற்றுவட்ட சாலையை விரைந்து அமைக்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும்.

திருச்செங்கோட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட அரசு கல்லூரியாக அரசிதழில் வெளியிட வேண்டும், திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை வாரச்சந்தை இடங்களை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT