நாமக்கல்

மாநில வாள் சண்டை போட்டியில் சிறப்பிடம்: ஆட்சியா் பாராட்டு

DIN

மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் வென்ற மாணவ, மாணவியரை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டினாா்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். இதில், தங்கம் - 7, வெள்ளி - 14, வெண்கலம் - 6 என மொத்தம் - 27 பதக்கங்களைப் பெற்று மாவட்டத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் பெருமை சோ்த்தனா்.

இவா்களில் இரு மாணவியா் மற்றும் நான்கு மாணவா்கள் பஞ்சாபில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனா். மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியா் தங்களது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) சி.சிவரஞ்சன், வாள்சண்டை பயிற்றுநா் செ.பிரபுகுமாா், கால்பந்து பயிற்றுநா் சு.கோகிலா மற்றும் கோ-கோ பயிற்றுநா் ச.புவனேஸ்வரி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

SCROLL FOR NEXT