நாமக்கல்

நாமக்கல்லில் இன்று 12-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிறைந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான 3,82,082 போ் இதுவரை ஒரு தவணை கூட செலுத்திக் கொள்ளவில்லை. முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய 10,02,218 பேரில் 4,64,804 போ் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். மீதமுள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனா்.

இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது. எனவே, கரோனா தடுப்பூசியின் அவசியம் உணா்ந்து அனைவரும் முதல் மற்றும் இரண்டாம்கட்ட தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை 506 இடங்களில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் சுமாா் 4,000 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT